உலகில் தோன்றும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆதாரம் இறைவன் என்றால் அம்மா என்பவள் அந்த தெய்வத்திற்கும் மேலாக சிறந்து விளங்குகிறாள்.
தனது பிள்ளையை பத்து மாதம் சுமப்பதில் இருந்தே தொடங்குகிறது அவளது பணி. அன்னை மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகில் அனைவருமே செல்லா காசுகளே.
அத்தகைய தாய்க்கு நிகராக நாம் எதுவும் சமமாக கூறி விட முடியாது.
இந்த பதிவில் எனக்கு தெரிந்தவாறு என் கற்பனையில் அம்மா பிறந்தநாள் வாழ்த்து கவிதை இங்கு நான் பதிவிட்டு உள்ளேன்.
அம்மா பிறந்த நாள் வாழ்த்து | அன்னை பிறந்த தினம் | தாய் பர்த்டே வாழ்த்து
என் தாயே நீங்கள் என்றென்றும் நோய் நொடிகள் மற்றும் குறைகள் இன்றி இன்று போல் என்றும் நல்லபடியாக வாழ்ந்து வாழ்க்கையில் என் உயர்வுக்கு தூண்டுதலாகவும், துணையாகவும் இருக்க வேண்டுமென உங்கள் பிறந்த நாளில் வாழ்த்தும் உங்கள் அன்பு மகன்.
நாட்கள், வாரங்கள், மாதங்கள், மற்றும் வருடங்கள் என அனைத்தும் கரைந்து ஓடினாலும் என்றுமே கரையாமல் தனது நிலை மாறாமல் நிலைக்கு நிற்கும் என் நேசமிகு அம்மாவுக்கு என் கனிவான இந்த பிறந்த தின நல்வாழ்த்து மடல்.
மாற்றம் என்ற ஒன்று மாறாதது என்று பலர் சொன்னாலும் நான் என் அன்னையின் அன்பில் மழலை குழந்தையாய் இருந்த நாள் முதல் இன்று வரை எந்தவொரு மாற்றத்தையும் கண்டது இல்லை.
உலகில் இயற்கை நியதிகளுக்கும் மாற்றம் தருபவளே என் அம்மா.
அந்த இறைவனுக்கும் தெரியும் அவனை விட தாய் தான் பெரியவள் என்று.
அதனால் தான் என்னவோ பிறந்த குழந்தையும் பேச விரும்புகிறது தன் முதல் வார்த்தை “அம்மா” என்று.
இப்படிக்கு உங்கள் அன்பு மகளின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களுக்காக.
தெய்வங்கள் உண்டா இல்லையா என்று வேதாந்தம், சித்தாந்தம் பேசும் பலருக்கும் புரிவது இல்லை இறைவன் உண்டு அன்னையின் வடிவில் ஒவ்வொரு வீட்டிலும் என்று.
நீங்கள் பிறந்த இந்த புனித நாளில் உங்களை வணங்குகிறேன் தாயே.
உன் அன்பால் என்னை நெகிழ செய்தாயே, உன் பாச வலையில் என்னை மூழ்க வைத்தாயே, அல்லும் பகலும் நீ கண் விழித்து என்னை காவல் காத்தாயே, நீ செய்த அனைத்து தியாகங்களுக்கு ஏழு பிறவி எடுத்தாலும் என்னால் சரி கட்ட இயலாது.
நீங்கள் இந்த பூமியில் மலர்ந்த இந்த நாளில் இந்த அன்பு மகனின் வாழ்த்துக்களை முழுமனதோடு ஏற்று கொள்ளுங்கள் அம்மா.
நான் வாழ்ந்து இந்த உலகையே வென்று வந்தாலும் சரி, வீழ்ந்து போய் இந்த பூமியில் துவண்டு தோல்வியுற சென்றாலும் சரி என்றும் உறுதுணையாய் எனக்கு பக்க பலமாக துணை நிற்பாள் அம்மா என்னும் பெண் தெய்வம்.
நீ நலம் பெற என்றுமே போற்றி என் வாழ்த்துக்களை இன்று உனக்கு உரைக்கிறேன்.
இந்த உலகம் என்னும் மாய வலையில் உண்மையான மெய்ப்பொருள் தான் “அம்மா”.
என் உணர்ச்சிமிகு பிறந்த தின நல்வாழ்த்துகளை இந்த தருணத்தில் உங்களுக்கு உரித்தாக்குகிறேன்.
வறுமையின் பிடியில் வாழ்ந்து விட்டு போய் விடலாம் ஆனால் தாய் பாசம் இன்றி வாழ்வது கொடுமையிலும் கொடுமை.
அத்தகைய நிலைக்கு என்னை தள்ளாமல் என் தாய் என்றுமே என்னுடன் நலமுடன் வாழ அவரின் பிறந்த நாளில் இறைவனிடம் யாசிக்கிறேன்.
இந்த உலகையே எனக்கு அடையாளம் காட்டிய அந்த தேவதை இந்த உலகில் உதித்த சிறந்த நாளே என் தாயின் பிறந்த நாள்.
உங்களை வாழ்த்த என் வயது போதாது உங்களை வணங்குகிறேன் அம்மா.