அவள் அருகே வரும் போது..❣

அவள் அருகே வரும் போது..❣Screenshot_20220907-180048_Opera Mini.jpg

அழகான அந்திமாலை பூதூவிய
நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்திய என் மோட்டார்
சைக்கிள் அவள் வருகைக்காக காத்திருந்த படியே
அந்த நொடித்தூளிகள் இனிமையாக

வரம் கேட்டுவிட்டு
காத்துநிற்கும் ஒரு பக்தன் போல் அவளுக்காக
நான் வழமையை விட சற்று

அதிக மணித்துளிகள் கடந்தது அவள் வருகைக்கு

புதிதாய் உதிர்ந்த
பூக்கள் அவள் பாதம் படாமலே இறந்து விட்டது
இத்தனையும் ஏங்க வைத்த அவள் வருகை தோழிகளுடன்
நகைத்து கொண்டே அவள் நடை அந்த நொடி அதுவரை பொறுமையாக
துடித்த இதயம் ஏனோ அவளை கண்டவுடன் அவசரம்
என்னை நோக்கிய அவள் விழிகள் தயக்கத்தில் தடுமாற்றம்
மாலை மறையும் சூரியன் அவள் விழியில் அஸ்தமித்தது போல்

அவள் மனதில் அத்தனை நாட்களும் சொல்லாமல்
மூடி வைத்து என்னை ஏங்க வைத்த அவள் காதல்
சொல்ல என்னிடம் என்னை நோக்கி வந்தாள்
அருகே அருகே அதுவரை அமைதியாக இருந்த
உள்ளம் உடல் ஏனோ பழைய பேருந்து போன்று
கட்டகட்ட என எங்கும் அதிர்வுகள்

அவள் தென்றல்
போல் வந்தாள் திசைமாறாமல் அதே போன்று என்னை தாண்டி
சென்றாள் நகைத்தவண்ணம் அவளும் தோழிகளும்
அப்போது எனக்குள்ளே ஒரு பாடல் ஒலித்தது “தில்வாலே புச்சி..டே..நி..ச்சா…ஓ..ஓ..😂 என்று

கவிதை + கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.