யார் சொன்னது குறிஞ்சி மலர் ஒரு முறை பூக்க பண்ணிரண்டு வருடம் ஆகும் என்று? வருடம் ஒரு முறை குறிஞ்சி மலராய் உன் பிறந்த நாளில் நீ பூக்கிறாயே !!!
உன் பிறந்த நாள் உன்னை படைத்ததற்காக அந்த பிரம்மனே பெருமைப்படும் மகத்தான நாள்.
உன் பிறந்த நாள் பெருமைப்படுகிறது நீ இந்நாளில் பிறந்ததற்காக. இனிய உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பூக்களெல்லாம் பெருமை கொள்ளும் நாள் இன்று. மலரொன்று புதிதாய் பூக்கும் நாள் இன்று. வான் நிலவு ஒன்று மண்ணில் தோன்றிய அதிசய நிகழ்வு இன்று. என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
காண கிடைக்காத மனித பிறவியில் பூமியில் பிறப்பது அழகானது. அந்த பிறந்த நாளை சிறப்பூட்டும் விதமாய் நாம் வாழ்ந்து காட்டுவது அதை விட அழகானது.
வருடத்தில் பல நாட்கள் வரும் போகும். ஆனால் உன்னுடைய பிறந்த நாள் போல எந்நாளும் எனக்கு சிறப்பு வாய்ந்ததாய் அமைந்தது இல்லை. தித்திக்கும் இந்நாள் போல் எந்நாளும் உனக்கு சிறப்பாய் அமையட்டும்.
இவ்வருடத்தின் எல்லா நாட்களும் ஒன்று கூடி இந்நாளில் உன்னை வாழ்த்தும் இனிய பொன்னாலே உன் பிறந்த நாள். அனைத்து தினங்களும் உன் வாழ்க்கையில் பொன்னாய் மிளிர உன்னை வாழ்த்துகிறேன்.
ஏன் இன்று நிலவில் ஒளி இல்லை? உன் பிறந்த நாளை கொண்டாட ஒரு வேளை நிலவு விடுமுறை எடுத்து கொண்டதோ?
கடவுள் கருணையினால் இன்று போல் என்றும் உன் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க, செல்வம் செழிக்க, நேசமான நண்பர்களுடனும் பிரியமான உறவுகளுடனும் என்றும் குதூகலுடத்துடன் உன் புன்முறுவலோடு நீடூடி வாழ இறைவனிடம் உனக்காக பிரார்த்திக்கிறேன்.
இன்று கொண்டாடும் பிறந்த நாள் போல என்றும் இன்பமாய் மனநிறைவுடன் பட்பல வெற்றிகளை உனதாக்கி வாழ்வில் முன்னேற என் வாழ்த்துக்கள்.
சில சமயம் எல்லா நாளும் நம் வாழ்வில் சிறப்பானதாக அமைவது இல்லை எனவே சிறப்பான உன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடு.
இந்த புதிய நாளில் மீண்டும் ஒரு முறை பிறந்தாயென நினைத்து கொள் கவலைகளை மறந்து உற்சாகமாக உன் பிறந்த நாளை கொண்டாட உன்னை மனமார வாழ்த்துகிறேன்.
வாழ்க்கையில் நாம் பிறந்ததை அடையாளம் காட்டும் மிக சிறந்த நாளே “பிறந்த நாள்”
மீண்டும் ஒரு முறை இந்த பிறவியில் நீ குழந்தையாக பிறக்க முடியாது நீ பிறந்த திருநாளை உன் வாழ்க்கையிலும் மறக்க இயலாது.
அனைவரும் இங்கு பிறக்கிறோம் எதோ ஓர் நாள் இறக்க போகிறோம் இதில் இல்லை சிறப்பு. நீ பிறந்த நாளை இந்த வரலாறு சொன்னால் அதுவே உன் சிறப்பு.
உன் தாய் உன்னை பூமியில் ஈன்றெடுத்த மகிழ்ச்சியான நாளே உன் பிறந்த நாள். அனைத்து நாளும் உனக்கானதாக இருக்காது இந்த நாளை விட உனக்கு எதுவும் சிறப்பானதாக அமையாது.
என் வாழ்க்கையில் எத்தனை சிறந்த நாட்கள் வந்தாலும் உன் பிறந்த நாள் என்றுமே எனக்கு மறக்க முடியாத பொன்னான நாளே என் அன்பே!
தேவதைகள் பூமியிலும் பிறப்பார் என உன்னை பார்த்து தான் நான் தெரிந்து கொண்டேன். நீ பிறந்த தினம் இன்று போல மன மகிழ்ச்சியுடன் என்றுமே எல்லா வளங்களும் பெற்று சிறப்பாக வாழ்வாயாக.
எத்தனை தோல்விகள் வந்தாலும் ஒன்று மட்டும் நினைவில் கொள். நீ பிறக்கும் முன்னரே பத்து மாதம் போராடி இந்த அகிலத்தில் உதித்தவன் என்று.
இறைவன் உண்டு என நான் ஒத்து கொள்கிறேன் உன் போன்ற தேவதையை படைத்து இருப்பதனால். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் காதலியே.
ஆயிரம் மாற்றங்கள் உலகில் உன் வாழ்க்கையோடு கரைந்து போனாலும் உன் மீது கொண்ட என் அன்பு என்றும் மறைந்து போகாது.
நீ பிறக்கும் போது உனக்கு யார் இருந்திருப்பார் என எனக்கு தெரியாது. ஆனால் இனி உன் வாழ்நாள் முழுவதும் உன் மீது என் அன்பு எப்போதும் இருக்கும் என்றும் இமை பிரியாது.
பல உறவுகள் கண்ணில் விழுந்த தூசு போல விலகி விடும், சில உறவுகள் என்றும் கண் இமை போல சேர்ந்து இருக்கும். அத்தகைய உறவான என் தோழிக்கு என் உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பூக்களாய் பிறந்து, புன்னகையில் தவழ்ந்து, நட்பு எனும் ஓடையில் நீந்தி, பிறந்த தினம் எனும் மைல் கல்லை அடையும் என் அன்பு நண்பனுக்கு வாழ்த்துக்கள்.
எனக்கு 365 தினங்களிலும் சிறந்த தினம் நீ மலர்ந்த இந்த உன் பிறந்த தினம்.
எனக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகையை விட சிறந்தது என்னவள் மண்ணில் தோன்றிய இந்த உன் பிறந்த நாள் பண்டிகை திரு நாள்.
Comments
என் தந்தைக்கு வாழ்த்து …
என் கை பிடித்து நடந்த முதல்வர் என் தந்தை …
உன் கால்பாதம் பார்த்து நடக்க கற்று உன் வழிகளில் நடக்க ஆசைப்படுபவன் நான்… உன்னைப்போல் வாழ்வில் தடைகள் தாண்டி வெற்றி நோக்கி நடக்க ஆசை கொண்டு பயணம் செய்யும் மாணவன் நான்..
உன்னை போல் தோற்றம் கொண்டு இருப்பதால் வாழ்விலும் உன்னை போல வெற்றிகளை காண ஆசைப்படுகின்றேன்…
நீ என் ஆசான் …வாழ்க நீர் …
என்று வாழ்த்தும் மாணவனாக ….
உன் மகனாக என் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.