செல்ல பேத்தி

அவளின் குறும்பு
சிரிப்பில் ஆயிரம்
முத்துக்களை சிதற
விடுகிறாள்
சிதறிய முத்துக்களை
கோர்ப்பதா….
சிரிக்கும் நிலவு முகத்தை ரசிப்பதா…
செய்வதறியேனடி !
மரகத கண்களெனும் உன் காந்தப்பார்வையால் நான் இரும்புத்
துகள்களாய் ஆனேனடி !
பிஞ்சு விரல்களால்
எனை நீ தொடும்போது
துள்ளித் தாவும்
மான்குட்டியாய்
ஆனேனடி !அவளின் குறும்பு
சிரிப்பில் ஆயிரம்
முத்துக்களை சிதற
விடுகிறாள்
சிதறிய முத்துக்களை
கோர்ப்பதா….
சிரிக்கும் நிலவு முகத்தை ரசிப்பதா…
செய்வதறியேனடி !
மரகத கண்களெனும் உன் காந்தப்பார்வையால் நான் இரும்புத்
துகள்களாய் ஆனேனடி !
பிஞ்சு விரல்களால்
எனை நீ தொடும்போது
துள்ளித் தாவும்
மான்குட்டியாய்
ஆனேனடி !
கொவ்வை இதழ்களால் எனை
நீ முத்தமிடும் போது உமிழும் எச்சில் சாறுகளை
அமுதாய் நினைத்து
மகிழ்ந்தேனடி…
உனது இரட்டை சிண்டில் நீ
சிட்டுக்குருவியாய்
ஆனாயடி….
உன் பிஞ்சு நடையில்
மயில் கூட தன்
நடனத்தை மறந்ததடி !
உன் மழலை மொழியில் என்
தமிழ் மொழியை
மறந்தேனடி !
நீ செய்யும் குறும்பே என்
கதைக்கும் என்
கவிதைக்கும்
கருவாகிவிடுகிறதடி
கொவ்வை இதழ்களால் எனை
நீ முத்தமிடும் போது உமிழும் எச்சில் சாறுகளை
அமுதாய் நினைத்து
மகிழ்ந்தேனடி…
உனது இரட்டை சிண்டில் நீ
சிட்டுக்குருவியாய்
ஆனாயடி….
உன் பிஞ்சு நடையில்
மயில் கூட தன்
நடனத்தை மறந்ததடி !
உன் மழலை மொழியில் என்
தமிழ் மொழியை
மறந்தேனடி !
நீ செய்யும் குறும்பே என்
கதைக்கும் என்
கவிதைக்கும்
கருவாகிவிடுகிறதடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.