இனி என் உயிரே பிரிந்தாலும் சரி என் காதலை நீ ஏற்கும் வரை உன்னை துரத்துவேன் உன் சுகமான இம்சையாக.
காதல் மட்டும் வாழ்க்கை அல்ல என்பது எனக்கு தெரியும் ஆனால் என்ன செய்ய கடைசியில் என்னையும் அவள் கண் பார்வைகளில் மயக்கி என் வாழ்க்கையை அபகரித்து விட்டா ள்.
நீ என்னை கண்டு கொள்ளாவிட்டாலும் உன் கண்ணுக்குள் தினம் இரவினில் நான் தூங்காமல் குடியிருப்பேன்.
உன் காதல் என்ற கணக்கு புதிருக்குள் விடை தெரியாத மாணவனாக நான்.
உன்னை விரும்பும் இதயம் எப்போதுமே உனக்கே சொந்தம் நீ என்ன செய்தாலும் தாங்கி கொள்ளும் என்ற நினைப்பில் வலிகளை தந்து அதை நிரந்தரமாக கொன்று விடாதே.
அன்பே நான் கலங்குவேன் என்று பொய்யாக மட்டும் நேசித்து விடாதே அதற்கு பதிலாக உண்மையாகவே என்னை வெறுத்து விடு.
இங்கு உண்மையான ஒரு இதயத்தின் அன்பினை புரிந்து கொண்டவர்களை விட புரியாமல் கொன்றவர்களே மிகுதி.
உண்மையான நெஞ்சங்களுக்கு புண் பட்ட மனதின் வேதனைகள் சொல்லாமலேயே புரியும் காதல் என்ற பார்வை மொழிகளால்.
நான் நீ என்ற இருவர் இன்று நாம் என்று சங்கமம் ஆகும்போது உணர்கிறேன் அன்பின் உணர்வுகளை உயிரோட்டமாய்.
என்று நான் இல்லாத வாழ்க்கையை தேடி வாழ நீ பழகி கொண்டாயோ அன்றே நான் உணர்ந்து விட்டேன் என் காதல் தனிமைப்பட்டு விட்டது என்று.
நினைவில் நின்றவர்களை வாழ்க்கையில் சேர முடியாமல் போனாலும் அவர்களின் ஞாபகங்கள் நெஞ்சை விட்டு அகலுவது இல்லை நம் மூச்சு உள்ள வரை.
எந்தன் வாய் வார்த்தைகள் உனக்கு கேட்காமல் இருந்தால் என் தலையணை சொல்லும் என் உள்ளத்தை உள்ள படி.
நமக்குள் இனி ஒன்றும் இல்லை என்று ஒரு பெண் சுலபமாக சொல்லி விடும் அந்த நாளே ஒரு ஆணின் சகஜமான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளாக அமைந்து விடுகின்றது.
என் இமைகள் பார்க்க துடிக்கும் முகம் நீ தான். என் செவிகளில் இசை உன் குரல் தான். என் இதழ்கள் சொல்ல நினைப்பது உன் பெயர் தான். என் கரங்கள் பற்ற நினைக்கும் துணை நீ மட்டும் தான்.
வேண்டாமே இந்த காதல் அவஸ்தை என்று விலகி நின்றாலும் சுடும் தீயை போல தினமும் உன்னை நினைத்தே வெந்து போகின்றது இந்த பாழாய் போன என் மனம்.
மனதில் அன்பு இருந்தாலே போதும் எதுவும் சாத்தியமே. கடினமான இதயம் கூட கரையும் அன்பை மழையாய் பொழியும் போது .
நட்பு என்ற பாசறை ஒன்றில் அடைக்கலம் புகுந்தோர் கண்டிப்பாக கெட்டு போக மாட்டார்கள்.
என் கண்ணீரில் உள்ள வலியின் வலிமை கண்டிப்பாக உன்னை மாற்றும் என்ற நம்பிக்கையில் நம் நினைவுகளை அசை போட்டு கொண்டு உன்னை நினைத்தே வாழும் உன் உயிர் காதலி.
வார்த்தைகள் விலை மதிப்பு இல்லாதவை உன்னை விரும்பும் இதயத்தில்… அதே வார்த்தை மலிவானது உன்னை விரும்பாத இடத்தில்….
காதல் என்னும் சிறு பூந்தோட்டம் நம் நேசத்தால் பெருகி படர்ந்து போகின்றது ஒரு பெருந்தோட்டமாய்.
உன்னை எதிர்க்கும் உறவுகளிடம் ஏங்கி நிற்பதை விட உன்னையே எதிர்பார்க்கும் உறவை ஏற்று கொள்ளலாம்.
உலகில் அனைவரின் மனதையும் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி போல செய்திருந்தால் சில நேசங்களிடம் நாம் பாசங்கள் காட்ட தேவைகள் இருந்திருக்காது.
இறைவன் கொடுத்த இந்த உலகில் அனைத்து ஜீவராசிகளும் அவரின் பிள்ளைகளே என்றபோது நீ மட்டும் எப்படி அனாதை ஆவாய்?
உன்னை விட பலமுள்ளவன் இந்த அகிலத்தில் இருக்கலாம் ஆனால் யாரிடமும் அன்பு இல்லாதவன் இந்த பிரபஞ்சத்தில் இருக்கவே முடியாது.
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட இரு மனங்கள் இணைந்து இருந்தால் தொலைவுகள் என்பது ஒரு தூரமில்லை பிரிவுகள் என்ற பேச்சிற்கே வேலை இல்லை.
யாரை நம்புவது என்ற கேள்விற்கு அனுபவத்தின் மூலம் விடை தெரிவதற்குள் பாதி வாழ்நாளே முடிந்து விடுகிறது.
பாதையை பார்த்து தான் நடக்கிறேன் எனினும் உன் காலடி சத்தத்தில் இருந்து வரும் சிணுங்கும் கொலுசுகளால் என் பாதைகள் ஏனோ தடுமாறித்தான் போய் விடுகின்றது.
உன்னை என் காதலுக்கு சொந்தமாகத்தான் கேட்டேன் நீயோ என் இரு விழிகளில் சிந்தும் கண்ணீருக்கு தான் சொந்தமாக ஆசைப்படுகிறாய் போலும்.
நீ இல்லாத இந்த ஒவ்வொரு இரவுகளும் என் வாழ்க்கையில் கறை படிந்த மீளா துயரங்கள்.
என் கோபங்களிலும் உன் மீது பரிவு இருக்குமே தவிர பிரிவு இருக்காது.
அனைத்து இதயங்களுக்குள்ளும் பூட்டி வைத்து மறைக்கப்பட்ட சில சொல்லப்படாத விரக்திகளும் வலிகளும் நிச்சயம் உண்டு.
உன்னை மறக்க சொல்லி புத்தி எனக்கு புகட்டும் பாடம் ஏனோ என் மனதிற்கு புரிவதில்லையே?
மீண்டும் மீண்டும் உன்னிடமே யாசிக்கிறேன் இரக்கப்பட்டாவது மனம் உவந்து என்னை சேர்த்து கொள்வாயோ என்று.
நீ கடைசியாக நிறுத்த சொல்லி கேட்பது என் காதலை மட்டும் அல்ல என் உயிர் மூச்சையும் தான்.