உலகில் நாம் கொண்டுள்ள உறவுகளிலே அம்மாவிற்கு பின் மனைவி தான் என்று சொல்லுவார்கள் (தாய்க்கு பின் தாரம்).
அந்த அளவிற்கு துணைவி என்பவள் நம் வாழ்க்கையில் நம் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறாள் என்றால் அது மிகை ஆகாது.
ஒரு நல்ல குணமிகு மனைவி இருக்கும் குடும்பம் எப்போதும் கெட்டு போவது இல்லை. தனது கணவன் ஒழுக்கம் இல்லாமல் அப்படி இப்படி இருக்கும் குடும்பமும் இந்த உலகில் வாழ்ந்து தான் வருகிறது அனைத்தும் சகித்து கொண்டு பொறுமையுடன் வாழும் துணைவியினால்.
அன்பு, சகிப்பு தன்மை, பொறுமை, கடமை, தியாகம், தூய்மை போன்ற நற்பண்புகள் பெண்களின் குணம் என்றாலும் கூட அது மனைவி என்ற ஸ்தானம் வரும்போது இன்னும் அதிகமாகிறது.
ஒருவனை குடும்பத்தார் சொல்லி நம்பி யாரென்று தெரியாமல் மணமுடிக்கும் நேரத்தில் ஆரம்பமாகிறது அவளது தியாகம்.
என்றுமே நம்பிக்கையாகவும், கணவனை ஊக்குவிப்பவளாகவும் இருக்கும் பெண் மனைவியாய் கிடைத்தால் அதை விட பெரிய பாக்கியம் இந்த உலகில் ஏதும் இல்லை.
நாள் பொழுதும் உங்கள் நலனையே எண்ணி கொண்டு இருக்கும் உங்கள் மனைவிக்கு அவளின் பிறந்த நாளன்று இந்த மனைவி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை அனுப்பி மகிழச்செய்யுங்கள்.
மனைவி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை
கணவன் தனது மனைவியிடம் எதிர்பார்க்கும் விதம் போலவே ஒவ்வொரு மனைவிக்கும் சொல்லப்படாத கனவவுகளும், ஆசைகளும் இருக்கும். உங்கள் மனைவியின் பிறந்த நாளும் முக்கியம் வாய்ந்ததே. அதற்கும் மதிப்பு அளியுங்கள் நான் பதிவிட்டு உள்ள இந்த மனைவி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை உங்கள் துணைவியை நிச்சயம் மகிழ்விக்கும் என்பதில் ஐயமில்லை.
வாழ்க்கையின் அவசியத்தை உணர்ந்து மனைவியுடன் என்றுமே ஒற்றுமையாக சண்டையிடாமல் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
இதுவரை தனிமையின் அவதியின் விளிம்பில் வாழ்ந்து வந்த என்னை மாற்றி மெல்ல மெல்ல பாசம் என்ற மெழுகினால் என்னை ஒளியேற்றினாய்.
என்றுமே உன்னை நான் மறவேன். உன் பிறந்த நாள் எனக்கு எப்பொழுதும் ஒரு இனிய திருநாள் தானே என் வாழ்நாள் மனைவியே
அன்பிலே என் தாயாக பண்பிலே என் தந்தையாக திகழும் என் நேசமிகு மனைவிக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
இறைவன் இருக்கிறான் என்று தெரிந்து கொண்டேன் உன்னை போல் ஒரு குணமிகு மனைவி எனக்கு கிடைத்ததில் இருந்து இனிய பிறந்த நாள் என் காதல் மனைவியே.
என்னவளே நீ வந்த போது தான் பாசம் என்ன என்பதை தெரிந்து கொண்டேன், பெற்ற தாய் இல்லாத குறையை போக்கினாள்.
என்றும் என் வாழ்க்கையின் நம்பிக்கையாகவும், நான் அடையும் வெற்றிக்கு உறுதுணையாகவும் நீ திகழ்ந்தாய்.
என் அன்பான துணைவிக்கு மனப்பூர்வமான பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.
அனைவருமே வாழ்க்கையின் ஒரு பகுதியில் நம்மை விட்டு பிரிந்து தான் சென்று விடுவார்கள்.
ஆனால் என்றுமே துணையாக இருக்க அனுப்பியிருக்கும் அதிசய மங்கையே “மனைவி”.
இன்று போல் என்றும் குறை இன்றி வாழனும் என்று இனிதே வாழ்த்துகிறேன்.
புதிதாய் பிறந்தாள் அந்த ரதி தேவதை, பிறந்த வீட்டின் ராணியானாள், அவள் என்றுமே அப்பாவின் செல்ல பிள்ளையாவாள்.
விரும்பம் இல்லை என்றாலும் கூட பெற்றோரின் ஆசைக்கு அடிபணிவாள், பிறகு மீண்டும் புதிதாய் பிறந்தாள் தனது புகுந்த வீட்டில்.
கணவனின் வார்த்தைகளை தன்னுடைய ஆசைகளாக்கி கொண்டாள், சுற்றத்தாரிடம் மகிழ்ந்து பழகினாள்.
மாமியார் மற்றும் மாமனாருக்கு இன்முகத்தோடு பணிவிடைகள் செய்தாள், வீடு, வாசல் மற்றும் பிள்ளைகளே அவளுடைய உறவுகள்.
இப்போது சொல்லுங்கள் மனைவியை விட வேறு யார் இருப்பார் இந்த உலகத்தில் நமக்கு அரவணைப்பாக. வாழ்த்துக்கள் என் இல்லத்தரசியே.
அவளுக்கு என்று ஆசைகள் இல்லாமல் இல்லை.
தனது மணாளனின் அவாப்படி நடக்கனும் எதுவும் என அவனை நம்பி கடைசி வரை தன்னையே கொடுத்து அர்ப்பணிப்பு உணர்வோடு வாழும் அனைத்து மனைவிமார்களும் நம் நாட்டின் வாழும் தெய்வங்களே.
என்றுமே பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
மணமுடிக்கும் முன்னர் எப்படி வாழ்ந்தாலும் மணமுடித்த பின் தனது குடும்ப நலனை கருத்தில் கொண்டு பொது நலமோடு வாழும் மனைவிகள் என்றுமே உயர்வானவர்களே.
என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஆசைக்கு ஆசையாய், துணைக்கு துணையாய், என்றுமே என் கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து கொள்ளும் சிறந்த துணையாய் இருக்கும் என் இல்லத்தரசிக்கு அவளது பிறந்த நாளில் என்றுமே இன்று போல் நலமுடன் வாழ வேண்டுமென்று எல்லா வல்ல அந்த இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
தாயிற்கு அடுத்து தாரம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தந்தவேளே, என்றுமே என் நலன் விரும்பியாக இருப்பவளே, என் நிலை தாழ்ந்தாலும் உன் மீது கொண்ட அன்பு என்றுமே மாற போவது இல்லை என் துணையே, என் அழகான மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உரிமையாக இருக்கும் உறவுகள் என்றுமே பொய் ஆவது இல்லை என் மனைவியை போல.
நீ உதித்த தினத்தில் உன்னை மனநிறைவோடு வாழ்த்துகிறேன்.