நாம் வாழும் வாழ்க்கையை சிறப்பாக செயல்படுத்த தன்னம்பிக்கை மிகவும் அவசியம். இந்த பதிவில் உள்ள வாழ்க்கையின் வெற்றிக்கு தேவையான தன்னம்பிக்கை துளிகள் நிற்சயம் உங்களை ஊக்குவிக்கும்.
வாழ்வினை வெல்ல உதவும் தன்னம்பிக்கை துளிகள் மற்றும் ஊக்குவிக்கும் கவிதைகள்
ஆயிரம் தோல்விகளை நீ ஒரு விஷயத்தில் அடைந்தாலும் சற்றும் சளைக்காத போராட்ட குணம் ஒன்று உன்னிடம் இருக்குமேயானால் உன் போல வெற்றியாளன் இந்த உலகில் இன்னும் உருவாகவில்லை.
நல்லது எது கெட்டது எது என்பதை யார் சொன்னாலும் அனைவரின் கூற்றையும் நீ நம்பலாம் அனால் ஆராய மட்டும் மறந்து விடாதே. உன் சுய சிந்தனையை முடக்கி விடாதே.
நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம். நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது கடினம்.
எதையும் தாங்கும் மனவலிமை ஒன்று உனக்குள் இருந்தால் தோல்விகளை துவைத்து காயப்போட்டு விடலாம்.
தோல்வியும் வெற்றியும் நம் வாழ்க்கையின் சுக துக்கங்கள் அன்றி என்றுமே நிலையானது அல்ல நிரந்தரமும் அல்ல.
தன்னம்பிக்கை என்ற ஒன்றை உன்னிடம் இருந்து சீர்குலைக்கும் உயிர் கொல்லி நோய் தான் அச்சம். அதை போக்கும் மருந்தே தைரியம்.
ஒரு காரியம் செய்து முடிக்கும் முன்னரே தயங்கி நிற்பவனை வாழ்க்கை என்றுமே ஆதரிப்பது இல்லை.
எந்த ஒரு வேலைகளிலும் நீ காலம் தாழ்த்துவது என்பது தோல்வி அடைய அந்த தோல்வியிடமே தோல் கொடுப்பதற்கு சமம்.
காலம் என்றுமே உனக்காக நிற்காது. நீ தான் காலத்திற்கு தகுந்த மாதிரி உன்னுள் மாற்றத்தை வெளிக்கொணர வேண்டும்.
உன் பலவீனத்தை முழுவதுமாக நீ அறிந்து இருப்பாயானால் உன் எதிரிகளையும் நடுங்க வைக்கலாம் உன் பலத்தால்.
ஆயுதங்கள் தாங்கினால் மட்டும் போர்வீரன் ஆக முடியாது. முறையான பயிற்சியும், தன்னம்பிக்கை குணமும், எதிரிகளை வெல்லும் சாதுர்ய அறிவும், எங்கு எப்படி செயல்பட வேண்டும் என்ற சமயோஜித புத்தி இவை அனைத்தும் இருந்தால் தான் அவன் சிறந்த போர் வீரன் ஆகிறான்.
அனைவர்க்கும் இங்கே திறமைகள் குவிந்து கிடக்கின்றது. இதில் என்ன மாற்றமெனில் அதை நம்பிக்கையியோடு செயல்படுத்துபவன் வாழ்க்கையில் முன்னிலை வகிக்கிறான். மற்றவரெல்லாம் பின்தங்கி விடுகிறார்கள்.
குறிப்பு:-
இந்த தன்னம்பிக்கை கவிதைகள் கண்டிப்பாக வாழ்வில் மாறுதல்கள் தோன்ற சிறந்த அடித்தளமாக அமையும். ஒரு முறை வெற்றிக்கனியை பறிப்பது எப்படி என்ற சூட்சமம் தெரிந்து விட்டாலே போதும் அதன் பின் ஒவ்வொரு தடைகளையும் எதிர்கொள்ளலாம் தைரியமாக.