அலைப் பாயும் எண்ணங்களை
அடக்கிய அமுதக்கடல் நீ
அனணயாத தீச்சுடராய் ஆயுளும்
ஆகாய சூரியன் நீ
தெவிட்டாத தேனைப் போல்
தித்திக்கும் பேரமுதம் நீ
பேசாத ஓவியம் போல் பேசிடும்
பொல்லாத கள்வன் நீ
திறவாத மனவரைகளைத் தட்டும்
திறம் படைத்த கையாள் நீ
ஓடும் நீரைப் போல ஓயாத
அசைவின் இசைவு நீ
திறவாத புத்தகங்களின் பக்கங்களில்
தீராத சொற்றொடர் நீ
எழுத்துக்களால் ஒன்றிணைந்த
ஒற்றுமைப் பாலம் நீ
ஒளிவீசும் சோதியைப் போல்
என் உள்ளத்தை ஆளும் நீ
என் இதயமான நீ
என் மூச்சாவாய் என் கவியே….